
கொள்ளு சுண்டல்
சத்தான சுவையான கொள்ளு சுண்டல் எப்படி செய்வது என்று பாப்போம். சுண்டல் போடி சேர்ப்பதால் சுவையும் மனமும் கூடும். ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன்.
தேவையான பொருட்கள்
கொள்ளு – 1/2 கப்
தேங்காய் துருவல் – 2 மேஜைக்கரண்டி
கொத்தமல்லி இலை – 2 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
வறுத்து பொடி செய்ய
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
தனியா – 1 தேக்கரண்டி
சிகப்பு மிளகாய் – 4
தாளிக்க
எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் – 2 சிட்டிகை
கருவேப்பிலை – 1 கொத்து
செய்முறை
1. கொள்ளை முதல் நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள், தண்ணீரை வடித்து, வேறு தண்ணீர் கொள்ளு மூழ்கும் அளவிற்கு சேர்க்கவும். அதனுடன் உப்பு சேர்த்து, குக்கரில் 3 விசில் வரும் வரை, மிதமான தீயில் வேக வைக்கவும்.
2. வறுத்து போடி செய்ய தேவையான பொருட்களை, 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, கடாயில் பொன்னிறமாக வறுத்து, ஆரிய பின் போடி செய்து வைத்துக்கொள்ளவும்.
3. கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து, வேகவைத்த கொள்ளினை தண்ணீர் வடித்து சேர்க்கவும். ஒரு நிமிடம் வதக்கி, பொடித்த பொடியை தூவி, குறைந்த தீயில் பிரட்டவும்.
4. நறுக்கிய கொத்தமல்லி, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.
குறிப்பு:
** கொள்ளு வேகவைத்த தண்ணீரை வீணாக்காமல் சாம்பாரிலோ, ரசதிலோ சிறிது சேர்த்துக்கொள்ளலாம்.

சத்தான சுவையான கொள்ளு சுண்டல் எப்படி செய்வது என்று பாப்போம். சுண்டல் போடி சேர்ப்பதால் சுவையும் மனமும் கூடும். ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன்.
- 1/2 கப் கொள்ளு
- 2 மேஜைக்கரண்டி தேங்காய் துருவல்
- 2 மேஜைக்கரண்டி கொத்தமல்லி இலை
- உப்பு - தேவையான அளவு
- 1 தேக்கரண்டி கடலை பருப்பு
- 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
- 1 தேக்கரண்டி தனியா
- 4 சிகப்பு மிளகாய்
- 2 தேக்கரண்டி எண்ணெய்
- 1/2 தேக்கரண்டி கடுகு
- 2 சிட்டிகை பெருங்காயம்
- 1 கொத்து கருவேப்பிலை
- கொள்ளை முதல் நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள், தண்ணீரை வடித்து, வேறு தண்ணீர் kollu மூழ்கும் அளவிற்கு சேர்க்கவும். அதனுடன் உப்பு சேர்த்து, குக்கரில் 3 விசில் வரும் வரை, மிதமான தீயில் வேக வைக்கவும்.
- வறுத்து போடி செய்ய தேவையான பொருட்களை, 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, கடாயில் பொன்னிறமாக வறுத்து, ஆரிய பின் போடி செய்து வைத்துக்கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து, வேகவைத்த கொள்ளினை தண்ணீர் வடித்து சேர்க்கவும். ஒரு நிமிடம் வதக்கி, பொடித்த பொடியை தூவி, குறைந்த தீயில் பிரட்டவும்.
- நறுக்கிய கொத்தமல்லி, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.