
கருவேப்பிலை பொடி வயிற்றுக்கும் உடம்பிற்கும் மிகவும் நல்ல ஒரு பொடி. இதனை, சாதத்தோடு நல்லெண்ணெய் ஊற்றி கலந்து சாப்பிட வேண்டும்.
பொதுவாக, பருப்பு பொடி தான் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்/ செய்வார்கள். அனால் இதுவும் நல்ல சுவையுடனும், மணத்துடனும் இருக்கும். தலை முடிக்கு கருவேப்பிலை மிகவும் நல்லது. இது, நரை முடி வராமல் இருக்க ஏற்றது. மேலும் பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது. கர்ப்பப்பை தொடர்பான எல்லா கோளாறுகளுக்கும் இது உகந்த மருந்து. அதனாலே தான் என்னவோ, இதற்கு கரு + வேப்பிலை = கருவேப்பிலை என்று பெயர் இருக்கிறது.
நீங்களும் இந்த கருவேப்பிலை பொடி மாதாமாதம் செய்து சாப்பிட்டால் பயன் பெறலாம்.

கருவேப்பிலை பொடி செய்முறை
Prep Time
20 mins
Cook Time
10 mins
Total Time
30 mins
கருவேப்பிலை பொடி வயிற்றுக்கும் உடம்பிற்கும் மிகவும் நல்ல ஒரு பொடி. இதனை, சாதத்தோடு நல்லெண்ணெய் ஊற்றி கலந்து சாப்பிட வேண்டும்.
Course: Condiments
Cuisine: Indian
Servings: 1 cup
Ingredients
- 1 கப் கருவேப்பிலை நன்கு அடைத்து அளக்கவும்
- 1/2 கப் உளுத்தம் பருப்பு
- 8-10 சிகப்பு மிளகாய்
- 3 மேஜைக்கரண்டி துருவிய தேங்காய்
- 1/4 தேக்கரண்டி பெருங்காயம்
- உப்பு தேவைக்கேற்ப
- 2 தேக்கரண்டி எண்ணெய்
Instructions
- ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி, முதலில் பெருங்காயம், மிளகாய், உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக, மிதமான தீயில் வறுக்கவும்.
- துருவிய தேங்காய் கடைசியாக சேர்த்து, பொன்னிறமாக வறுக்கவும்.
- அடுப்பை நிறுத்திவிட்டு, அந்த வாணலியில் சூட்டிலேயே கருவேப்பிலையை சேர்த்து, இரண்டு முறை வதக்கி, அப்படியே ஆறவிடவும்.
- கருவேப்பிலை காய்ந்து, லேசாகவும் மொறுமொறுப்பாகவும் மாறிவிடும்.
- மைக்ரோ வேவ் ஓவென் இருந்தால் அதில் மூன்று நிமிடம் வைத்து அப்படியே ஒரு 2 நிமிடம் விட்டாலும் மொறு மொறு என்று ஆகி விடும். ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை கிளறிவிட வேண்டும்.
- ஆரிய பின், உளுத்தம் பருப்பு தவிர மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து பொடி செய்யவும்.
- கடைசியாக, உளுந்து சேர்த்து, கரகரப்பாக அரைக்கவும்.
Recipe Video
Recipe Notes
கருவேப்பிலையை நன்கு கழுவி, சுத்தம் செயது, ஒரு சுத்தமான துணியில் பரப்பி, நிழலிலேயே தண்ணீர் இல்லாமல் உலர்த்தவும். பிறகு தான் இந்த பொடியை செய்ய வேண்டும்.
கருவேப்பிலை பொடி செய்ய தேவையான பொருட்கள்
கருவேப்பிலை – 1 கப் (நன்கு அடைத்து அளக்கவும்)
உளுத்தம் பருப்பு – 1/2 கப்
சிகப்பு மிளகாய் – 8-10
துருவிய தேங்காய் – 3 மேஜைக்கரண்டி
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – 2 தேக்கரண்டி
கருவேப்பிலை பொடி செய்முறை
- ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி, முதலில் பெருங்காயம், மிளகாய், உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக, மிதமான தீயில் வறுக்கவும்.
- துருவிய தேங்காய் கடைசியாக சேர்த்து, பொன்னிறமாக வறுக்கவும்.
- அடுப்பை நிறுத்திவிட்டு, அந்த வாணலியில் சூட்டிலேயே கருவேப்பிலையை சேர்த்து, இரண்டு முறை வதக்கி, அப்படியே ஆறவிடவும்.
- கருவேப்பிலை காய்ந்து, லேசாகவும் மொறுமொறுப்பாகவும் மாறிவிடும்.
- மைக்ரோ வேவ் ஓவென் இருந்தால் அதில் மூன்று நிமிடம் வைத்து அப்படியே ஒரு 2 நிமிடம் விட்டாலும் மொறு மொறு என்று ஆகி விடும். ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை கிளறிவிட வேண்டும்.
- ஆரிய பின், உளுத்தம் பருப்பு தவிர மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து பொடி செய்யவும்.
- கடைசியாக, உளுந்து சேர்த்து, கரகரப்பாக அரைக்கவும்.
குறிப்பு
- கருவேப்பிலையை நன்கு கழுவி, சுத்தம் செயது, ஒரு சுத்தமான துணியில் பரப்பி, நிழலிலேயே தண்ணீர் இல்லாமல் உலர்த்தவும். பிறகு தான் இந்த பொடியை செய்ய வேண்டும்.
கருவேப்பிலை பொடி செய்முறை VERY HEALTHY PRODUCTS .