பாலக் கீரையில் இருக்கும் மொத்தமான காம்பு/ நரம்பை நீக்கிவிடவும். பொடியாக நறுக்கவும்.
பச்சை மிளகாய், தண்ணீர் சேர்த்து, பாலக் கீரையை நன்றாக அரைக்கவும்.
ஒரு கிண்ணத்தில், அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, பெருங்காயம், வெண்ணெய், ஓமம் சேர்த்து கலக்கவும்.
அரைத்த விழுதை சேர்த்து, மேலும் சிறிது தண்ணீர் தெளித்து, மிருதுவான மாவாக பிசையவும்.
முறுக்கு அச்சில், நட்சத்திர வடிவம் கொண்ட தகடை பொருத்தி, மாவை அதில் நிரப்பவும்.
ஒரு தட்டில் எண்ணெய் தடவி, அதில் சின்ன சின்ன வட்டங்களாக முறுக்கை பிழியவும்.எண்ணெய்யை சூடாக்கி, பிழிந்து வைத்த முறுக்கை அதில் தட்டை கவிழ்த்து போடவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து, முறுக்கை வேகா வைத்து, திருப்பி விடவும்.
மேலும் தீயை குறைத்து, சத்தம் முழுவதுமாக அடங்கும் வரை பொரித்து எடுக்கவும்.
எண்ணெய்யிலிருந்து வடித்து, மீதமுள்ள மாவை இதே போல சுட்டு எடுக்கவும்.