அரிசி மற்றும் பருப்பை கழுவி குறைந்தது 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பின், தண்ணீரை வடித்து ஒரு சுத்தமான துண்டில் தண்ணீரை வடித்து பரப்பவும்.
முதலில் மிளகு மற்றும் ஜீரகத்தை கொரகொரப்பாக அரைத்துக் கொண்டு, அரிசி மற்றும் பருப்பை சேர்த்து, படத்தில் காட்டியவாறு ரவா போல பொடியாக கவனமாக அரைக்கவும்.
ஒரு கடாயை சூடு செய்து, எண்ணெய் சேர்த்து, தாளிக்க வேண்டிய பொருட்களை வரிசையாக சேர்க்கவும்.
தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும். துருவிய தேங்காய், உப்பு சேர்க்கவும்.
பின்னர் அரைத்த அரிசி கலவை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
குறைந்த தீயில் 4-5 நிமிடங்கள் மூடி வேக வைக்கவும். தேங்காய் எண்ணெய் சேர்க்கவும் (விரும்பினால்). நன்கு கலந்து அடுப்பை அணைக்கவும்.
கை பொறுக்கும் சூட்டிற்கு வந்தவுடன் ஒரே அளவு உருண்டைகளாக எடுத்து, மொத்தமான அடைகளாகத் தட்டவும்.
நான் சிறு சிறு அடைகளாக ஒரு மூடி கொண்டு வெட்டி செய்தேன். நீங்கள், சாதாரணமாக பெரிய அடைகளாகத் தட்டலாம்.
ஒவ்வொரு முறையும் கைகளில் எண்ணெய் தடவிக்கொள்ளவும். பாலிதீன் பை அல்லது வாழை இலையில் தட்டலாம்.
தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, சூடானவுடன், மிதமான தீயில் இரு புறமும் பொன்னிறமாகும் வரை சுட்டெடுக்கவும்.